ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, திமுக, காங்., அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. தேர்தலுக்காக 500 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில் 5% இயந்திரங்களில், மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உண்ணி தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.