வெற்றிமாறன் டைரக்டில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ நடிப்பில் வெளியான விடுதலை படம் தமிழில் அமோக வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இப்படம் வருகிற ஏப்ரல் 15 ஆம் தேதி டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விடுதலை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற வெற்றிமாறன் கூறியதாவது “ஆடுகளம் படத்திற்கு பின் வடசென்னை படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்தேன். எனினும் ஒருசில காரணங்களால் அப்படத்தில் அவர் நடிக்கவில்லை.

இதனால் அந்த கதாபாத்திரத்தையும் நான் நீக்கிவிட்டேன். கொரோனோ காலக்கட்டத்தில் மகேஷ் பாபுவுடன் நிறைய கதைகள் பேசினேன். இருப்பினும் அது எதுவும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. நான் ஸ்டார்க்காகவோ காம்பினேஷன்காக படம் எடுக்க மாட்டேன், கதைக்காக படம் பண்ணுவேன். நான் யோசித்து வைத்த கதைகளில் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் மாதிரி ஸ்டார் தேவைப்படுகிறது. தற்போது ஜூனியர் என்டிஆர் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆகவே நிச்சயம் படம் பண்ணுவேன். எனினும் அதற்கு டைம் ஆகும்” என அவர் கூறியுள்ளார்