தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தன் கணவர் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்வதாக நடிகை நீலிமா வேதனை தெரிவித்துள்ளார்.  இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது, என் கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் எல்லோரும் அவரை தாத்தா என்று கிண்டல் செய்கின்றனர். நாங்கள் இயல்பாக இருக்கவே விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.