கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி  விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இரண்டு பேரும் சென்னை அருகிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டம் ஆக திருமணம் செய்துகொண்டனர். அந்த திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில், அது தற்போது வரை வெளிவரவில்லை. திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், அவர்கள் வாடகை தாய் வாயிலாக 2 ஆண் குழந்தைகள் பெற்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையானது.

இதனிடையே விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் உடன் கூட்டணி சேர இருந்த திரைப்படமான ஏகே 62ல் இருந்து அவர் திடீரென்று நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி நயன்தாரா நடிப்பில் வந்த படங்களும் பெரிய வெற்றியை பெறவில்லை. இவ்வாறு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வந்துகொண்டிருப்பதால் நயன்தாரா மற்றும் விக்கி இருவரும் ஜோசியரை சந்தித்து இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் திருமணம் நடைபெற்ற நேரம் தான் என அவர் கூறினாராம். இதனால் விக்கி மற்றும் நயன்தாரா இருவரும் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.