சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காக இருந்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட ஜடேஜா பேட்டிங்கில் 16 பந்தில் 22 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக ஜடேஜாவுக்கு சிறந்த மதிப்பு மிக்க வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு பேட்டி கொடுத்த கேப்டன் டோனி ஜடேஜாவின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது எனவும், டேட்டிங்கில் கடைசி நேரத்தில் அவர் அடித்த ரன்களே வெற்றிக்கு முக்கிய பங்கு எனவும் கூறினார்.

இந்நிலையில் ஜடேஜா பரிசு பெற்ற புகைப்படத்தை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து அப்ஸ்டாக்ஸ்-க்கு தெரியுது. ஆனால் சில ரசிகர்களுக்கு தான் தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். அதாவது தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்காக ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் ஜடேஜா அவுட் ஆக வேண்டும் என ரசிகர்கள் கூச்சலிட்டனர். இது குறித்து ஒரு பேட்டியில் ஜடேஜாவே கூறியுள்ளார். தற்போது தன்னை அவுட் ஆக வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் சொன்னதைத்தான் ஜடேஜா மறைமுகமாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜடேஜாவின் பதிவு வைரலாகி வரும் நிலையில் தற்போது ஆர்சிபி அணியின் ரசிகர்கள் நீங்கள் எங்கள் அணிக்கு வந்து விடுங்கள் என்று ஜடேஜாவிடம் கூறி வருகிறார்கள். அதோடு come to RCB என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகிறார்கள்.