ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் கிராம மக்களிடம் பணம் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட பட்டதாரி தினேஷ் குமாருக்கு வருவாய் கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார்.

 

பனியாடை மட்டும் அணிந்த நிலையில் கட்டிலில் படுத்திருக்கும் அந்த அதிகாரிக்குச் சிலர் பணம் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தினேஷ் குமார், இந்த வீடியோ இரண்டு ஆண்டுகள் பழமையானது என்றும், அப்போது ஒரு பசுமைப் பண்ணைக்காக மக்களிடம் வசூலிக்கப்பட்ட நன்கொடை அது என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசு அதிகாரியின் இந்தச் செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் கௌரவ் அகர்வால் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பவானி சிங் ஆகியோர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகே அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.