தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொது தேர்வு நடந்து முடிந்த நிலையில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பில் 47 ஆயிரத்து 934 பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கும் விதமாகவும் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு உதவும் வகையிலும் துணை தேர்வை நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டது.

அதன்படி வருகின்ற ஜூன் 19ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த துணைத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மே 11ஆம் தேதி முதல் நடைபெற்ற வரும் நிலையில் இந்த தேர்வுக்கு மாணவர்கள் இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தற்போது தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தமிழ் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளுக்கு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.