தங்களை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். போர்சட்டங்கள் படி எவ்வாறு செயல்பட வேண்டும் என நானும் இஸ்ரேல் பிரதமரும் விவாதித்தோம் எனக் கூறிய ஜோ பைடன்,  அமைதியாக வாழ விரும்பும் அப்பாவி பாலஸ்தீனியர்களை புறக்கணிக்க முடியாது என்பதால் மனிதாபிமான உதவி செய்யப்பட்டு  வருவதாக தெரிவித்தார்.