பிரபல மலையாள நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் கூதாரா, யூ டூ புரூட்டஸ், சார்லி, ஸ்டைல், லூசிபர், உயிரே உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு தமிழில் அபியும் அனுவும், தனுசுடன் மாரி 2ம் பாகம் போன்ற படங்களில் நடித்து உள்ளார். இப்போது ஜித்தின் லால் டைரக்டு செய்யும் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் டோவினோ தாமஸ்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பாசில் ஜோசப், சுரபி லட்சுமி, ஹரிஷ் உத்தமன் போன்றோரும் இந்த படத்தில் உள்ளனர். மலையாளத்தில் தயாராகும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் சூட்டிங்கை காசர்கோடு சீமேனியில் அரங்குகள் அமைத்து நடத்தி வந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அரங்கு முழுவதும் எரிந்து நாசமானது. எனினும் படக்குழுவினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தினால் பல லட்சம் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.