தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த இலியானா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை இலியானாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெலுங்கு ஊடகங்கள் அண்மையில் செய்திகள் வெளியிட்டிருந்தது. அதாவது தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் பணம் வாங்கிவிட்டு அந்த படத்தில் நடிக்காததாகவும் அந்த பணத்தை இலியானா திரும்பக் கொடுக்காததாகவும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருடனும்‌ நடிகை இலியானாவுக்கு பிரச்சனை ஏற்பட்டதால் அவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் காரணமாகவே நடிகை இலியானாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால்தான் நடிகை இலியானா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை இலியானாவுக்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல்களில் உண்மை இல்லை என தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் நடிகை இலியானாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.