2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 மழையால்நிறுத்தப்பட்டு, பின் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான தொடரின் இரண்டாவது டி20 போட்டி  இன்று டப்ளினில்  இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடவுள்ளது..

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்ற விரும்புகிறது, அதே நேரத்தில் நடத்தும் அணியான அயர்லாந்து தொடரை சமன்செய்ய பார்க்கும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.. இரு அணிகளிலும் மாற்றமில்லை..  கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்..

இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவன் :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசீத் கிருஷ்ணா.

அயர்லாந்து டி20 அணியின் பிளேயிங் லெவன் :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி,  ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.