சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பதிரனா நாளைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடைசி போட்டியில் பதிரனா விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு பதிரனா விளையாடாததே காரணம் என்று பேசப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.