கடலில் மிதந்து கொண்டிருந்த இறந்த திமிங்கலத்தின் மீது ஏறி, குடிபோதையில் இருந்த இரண்டு மீனவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்ட வினோதமான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. போதையில் இருந்த அந்த மீனவர்கள், தண்ணீரில் மிதந்த திமிங்கலத்தின் சடலத்தின் மீது நின்றபடி சிரித்துக் கொண்டும் விதவிதமாகப் போஸ் கொடுத்தபடியும் இந்த அருவருப்பான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
NEW: Two drunk fishermen pose for a photo on a floating dead whale.
“These guys are going to jump on a dead whale… watch this thing explode.”
The individual who shared the footage said the whale didn’t smell and indicated that it had just passed.
“Wasn’t rotten, just… pic.twitter.com/mjIYde4g4l
— Collin Rugg (@CollinRugg) January 19, 2026
இந்தச் சம்பவம் எங்கு மற்றும் எப்போது நடந்தது என்பது குறித்த துல்லியமான விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், அந்த திமிங்கலம் அப்போதுதான் இறந்ததால் துர்நாற்றம் வீசவில்லை என்றும், அந்த நேரத்தில் தாங்கள் மதுபோதையில் இருந்ததாகவும் காணொளியைப் பதிவிட்டவர் ஒப்புக்கொண்டுள்ளார். இயற்கையையும் கடல்வாழ் உயிரினங்களையும் அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த மீனவர்களின் செயலைச் சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
