முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 3:1 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இருக்கும் பர்சபரா ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, கோலி, கேஎல் ராகுல்  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளனர். மேலும் கடைசி கட்டமாக உடல் தகுதியை எட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் காயத்துக்கு பின் மீண்டு வந்துள்ள ரோஹித் சர்மா இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என களமிறங்குவார். அதேசமயம் டி20 தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கும் என்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும். இந்நிலையில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷானகா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். எனவே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங்கில் களம் இறங்குகிறது.

இந்தியா லெவன் :

ரோஹித் சர்மா (கே ), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல் (வி.கீ.), ஷ்ரேயஸ் ஐயர்,ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், உம்ரான் மாலிக், சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

இலங்கை லெவன் :

நிஷாங்கா, குசால் மெண்டிஸ் (Wk), பெர்னாண்டோ, டி சில்வா,  அசலங்கா, டி ஷானகா (கே ), ஹசரங்கா, கருணாரத்னே, டி வெல்லலகே, கே ராஜிதா,  மதுஷங்கா.