பஞ்சாப் மாநிலத்திற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் இருந்து வந்த அந்த நபர் பஞ்சாபின் பெரோஸ்பூரில் நேற்று இரவில் ஊடுருவ முயற்சி செய்தார்.

அப்போது பாதுகாப்பு படையினரால் அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.