மராட்டிய மாநிலத்தில் உள்ள ரகடா பகுதியில் இந்துத்துவ அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அகமது நகர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் ஆகியவற்றின் பெயர்கள் அகில்யாபாய்நகர் மற்றும் பாக்யா நகர் என மாற்றப்படும்.

வருகின்ற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியா இந்து நாடு என அறிவிக்கப்படும். இதனை இந்துக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து சாதுக்கள் மற்றும் சாமியார்களின் முழக்கமும் இதுதான். இது அவர்களுடைய கணிப்பு. எனவே எது வந்தாலும் 2025 அல்லது 2026-ம் ஆண்டுக்குள் இந்திய அகண்ட இந்த நாடு என அறிவிக்கப்படும். மேலும் 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள், 150-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ நாடுகள் உள்ளபோது 100 கோடி மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மக்கள் வசிக்கும் இந்தியாவை ஏன் இந்து நாடாக அறிவிக்க கூடாது என்று கூறினார்.