
இலங்கை நாட்டில் பிப்ரவரி 4 தேதி 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் கோலாவாலமாக நடைபெற்றது. இந்த நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாடு 500 பேருந்துகளை வழங்கி உள்ளது. இதன் நோக்கம் இலங்கையின் கிராமப்புற பகுதிகளில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே ஆகும்.
இதனை முன்னிட்டு 50 பேருந்துகள் அதிபர் மாளிகையில் வைத்து அந்நாட்டு அதிபரான ரணில் விக்ரமசிங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பேருந்துகளின் இயக்கத்தை இலங்கை அதிபர் கொடியசைத்து துவங்கி வைத்தார். மேலும் இந்திய அரசு அடுத்த மாதம் இறுதிக்குள் 500 பேருந்துகளையும் இலங்கையிடம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.