ஆஸ்திரேலியா இந்தியா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. கில் மற்றும் சூர்யா 0 ரன்னிலும், பாண்டியா ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். விராட் கோலி அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். மேலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 117 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியாவிடம் சுருண்டது.