
கடலூரில் குழந்தை சடலத்தை தோளில் தூக்கி சென்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் பாலமுருகன், பச்சையம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலமுருகனுக்கு கடந்த மாதம் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்நிலையில் பச்சையம்மாள் உறவினர் ஜீவா என்பவர் பாலமுருகன் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை தான் பார்த்துக் கொள்வதாக கூறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் பாலமுருகன் உறவினருக்கு நேற்று போன் செய்த ஜீவா 4 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து விட்டதாகவும், தாங்கள் கடலூருக்கு வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் கடலூர் பேருந்து நிலையத்திற்கு யாரும் வரவில்லை. இதையடுத்து அவர்களை தேடிய போது ரோட்டில் பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளை தோளில் சுமந்தவாறு மற்றும் இரண்டு குழந்தைகள் நடந்து சென்றனர்.
இதனை பார்த்த உறவினர்கள் அந்த இரண்டு குழந்தைகளை பார்க்கும்போது அவர்கள் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. இதையடுத்து உறவினர்கள் அந்த குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இருந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் பச்சையம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பச்சையம்மாள் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையில் குழந்தை அடித்து கொல்லப்பட்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.