செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ),  முன்னாள் அமைச்சர் CV. சண்முகம் ஒரு பக்கம்… ஏய் என்னடா பேசுறீங்க… .என்ன பேசுறீங்க ? அவரும் ஒரு அமைச்சரா இருந்தவர். ஒரு பொறுப்பில் இருக்கிறார்,  மாவட்ட செயலாளராக இருக்கிறார். நான் என்ன கேட்கிறேன் ? ஜெயக்குமார் முந்தாநேத்து பேசும் போது நான் சொன்னேன்…  நீ பேசுறது எல்லாம் பொய். பழனிசாமியை தைரியம் இருந்தா பேச சொல்லு … பழனிசாமி … பழனிசாமி உனக்கு தைரியம் இருந்தா ?  கூட்டணி இல்லன்னு சொல்லு…

அமைப்பு செயலாளரா வச்சி பாக்கணும்… இல்ல பொது மேலாளர் ( ஜெனரல் மேனேஜர்)ரா வெச்சி பார்க்கணும்… இல்ல ஒரு மேனேஜராவது வச்சு பாக்கணும். இல்ல ஒரு ஸ்டாப்பா வச்சு பாக்கணும். உன்னுடைய மேனேஜ்மென்ட்ல இல்ல… இல்ல அதுக்கு கீழே வந்துட்டு வச்சிக்கோ… கிளெர்க்கா வச்சி பாக்கணும்….  அதுக்கு கீழ போனா பியுனா வச்சி பாக்கணும். எல்லாத்தையும் உடைச்சிட்டாரு.

ஒரு பியூன் இடத்துல கூட வச்சு பார்க்க முடியாத சூழ்நிலை. பழனிசாமி, ஜெயக்குமார் கருத்துக்கும், சொல்லுராஜு – சி வி சண்முகம் போன்றவர்கள் கருத்துக்கும்,  அனைத்திந்திய அண்ணா திமுக தொண்டர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். இனி பிரளயமே ஏற்படும். என்னனென்ன பேச போறாங்க பாருங்க ? அப்படினு சொல்லி… 

ஜெயக்குமார் குடுத்த ஸ்டேட்மெண்ட்க்கு எதிராக நீட்டா… அழகா… சொல்லிட்டாரு.  வாய மூடு….நடுவுல பேச கூடாது… சத்தமே போடாத புகழேந்தின்னு ஒரு ஆள் சொல்லிருக்கான்.. நான் பிஜேபி பத்தி பேசி,  கூட்டணி முறிவுனு சொல்லிட்டா 6 மணி நேரத்துல ஜெயிலுக்கு போனும் சொல்லி இருக்கான்,  அதுதான் உண்மை என தெரிவித்தார்.