திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, அண்ணாமலை சவால் விட்டு இருக்கிறார். பெங்களூருக்கு தளபதி போனால் அவரை எதிர்த்து முற்றுகை பண்ணுவாராம். நான் திருச்சியில் சொல்லிவிட்டு போகிறேன். நீ ஆண் மகனாக இருந்தால்… தைரியம் இருந்தால்… துணிச்சல் இருந்தால்…. உப்பு போட்டு சோறு தின்பவராக இருந்தால்… தளபதி வருகிறபோது தடுத்துப் பார்.

பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். ஆட்டுக்குட்டிகளுக்கு சொல்றேன்… திமுக தொண்டன் நினைத்தால்…. ஆடு ஆடாக இருக்கணும்னா ? ஆடு ஆடாக இருந்தால் வெச்சிருப்போம். அளவுக்கு மீறி ஆடு வாலாட்டுச்சுன்னா…  ஆட்டை பிரியாணியாக்கிடுவோம். திமுக காரனுக்கு தெரிந்த ஒன்று என்று தெரிவித்தார்.