திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி,  கொலை பண்ணுறவன் எல்லாம் உங்க கிட்ட இருக்கின்றான். ஒரு சாமியார்… சாமியார்  என்றால் யார் ? யோக்கியன் என்று தானே அர்த்தம். முற்றும் துணிந்த முனிவன்  என்று தானே அர்த்தம். அவன்  உதயநிதி ஸ்டாலின் உடைய தலையை சீவினால் பத்து கோடி தாரானாம். முதல்ல IT அவன் வீட்டுக்கு போகணும்.ED அவன் வீட்டுக்கு போகணும்.

நம்முடைய செந்தில் பாலாஜி 1 கோடி ரூபாய்க்கு தான் ஊழல் பண்ணினார் என்று சொல்லிட்டு,  நீ ஜெயிலில்வச்சி இருக்க.  10 கோடி ரூபாய் இந்த சாமியாருக்கு எப்படி வந்தது ? ED போகுமா ? தல வெட்டுறதுக்கே…. ஒருத்தர் தல வெட்டுவதற்கு 10 கோடி தர்றானா…  எத்தனை கோடி இவன்கிட்ட இருக்கு ? ஆகவே ஒன்றை மட்டும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் களத்துல இறுக்கினோம் வச்சிக்கோங்க…  வேற மாதிரி ஆகும். ஒரு காலத்துல நாங்க சொன்னவங்கதான்.. தூக்கி பிடிச்சா கொடி…  திருப்பி பிடிச்சா  தடி என்று சொல்லித்தான் இந்த கட்சிக்கு வந்தவங்க.  ஒரு காலத்துல அப்படி  இருந்தது. தடியடிகளை பார்த்தவங்க நாங்க. மிஷாவை பார்த்தவங்க. இந்த மேடையில் உள்ள அத்தனை பேரும் ஜெயிலுக்கு போனவுங்க தான்.  எல்லாருமே ஜெயிலுக்கு போனவங்க தான்.

ஒரே ஒரு ராத்திரி இவனுங்கள போலீஸ் ஸ்டேஷன்ல வச்சாலே….  அடுத்த நாள் கட்சிக்கு வராம இருப்பவன் தான் இன்னைக்கு பிஜேபியில் இருக்கிறவன். எங்களைப் பார்த்து சவால் விடுவீர்களே  ஆனால் ? திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டன் எதற்கும் தயாராக இருக்கிறான். என்பதை எடுத்துச் சொல்லி விடைபெறுகிறேன்.