மிலாடி நபி இசுலாமிய நாட்காட்டியில் 3வது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தில் வரும் முகமது நபி அவர்களின் பிறந்த நாள் ஆகும். ரபிஉல் அவ்வல் மாத பிறை செப்டம்பர் 16 ஆம் தேதி அதாவது நேற்று மாலை தமிழகத்தில் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 ஆம் தேதி மிலாடி நபி விழா கொண்டாடப்படும் என்று அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 28 ஆம் தேதி தமிழகத்தில் அரசு பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.