திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரபல பேச்சாளரும், முக்கிய பொறுப்பில் இருப்பவருமான தமிழன் பிரசன்னா, சட்டமன்றத்தில் அண்ணன் எடப்பாடிக்கு புதிதாக ஒரு பல்பு முளைத்து இருக்கிறது. எழும்பூர் தொகுதி என்பது தாழ்த்தப்பட்ட இஸ்லாமிய பெரும் குடிமக்கள் அதிகம் வாழ்கின்ற இடம். எடப்பாடி சொன்னார், இஸ்லாமிய சிறை கைதிகளை இந்த அரசு விடுதலை செய்ய மறுக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு துரோகம் விளைவிக்கிறது,  இஸ்லாமியர்களை  வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறது என எடப்பாடி சொன்னார்.  நான் அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது,  ஒரு நிமிடம் நான் என்னை கிள்ளி கொண்டேன். இது யார் வாயில் இருந்து  வருகிறது ? எடப்பாடி பழனிச்சாமி வாயிலிருந்து வருகிறது.

நான் ஒரு செய்தியை மக்களுக்கு சொல்லுகிறேன். நம்முடைய ஜமாத்தில் இருந்து தவறான செய்திகள் இன்றைக்கு பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த செய்திகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும்,  கடமையும் இந்த இயக்கத்தில் கலைஞரைப் பார்த்து கற்றுக் கொண்டவன் என்கின்ற அடிப்படையில அந்த செய்தியை சொல்லியாக வேண்டும்.

நண்பர்களே இங்கு சிறைக் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்று எங்கள் மீது  குற்றம் சுமத்துகிறான். பத்தாண்டு காலம் உங்கள் ஆட்சி…  பத்தாண்டு காலம் உங்கள் ஆட்சி…  அந்த பத்தாண்டு காலத்தில் ஒரு இஸ்லாமிய சிறை கைதியாவது எடப்பாடி மீசை வைத்த ஆண்மகனாக இருந்தால் ? விடுதலை செய்துவிட்டு எங்கள் மீது கை உயர்த்தி இருக்க  வேண்டும் என தெரிவித்தார்.