தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சாந்தனு ஒரு சிறிய ரோலில் நடித்திருப்பார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சாந்தனு நிறைய பேட்டிகள் கொடுத்திருப்பார். ஆனால் படத்தில் வெறும் 12 நிமிடங்கள் மட்டுமே சாந்தனு காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆன பிறகு நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தால் தான் பட்ட வேதனை குறித்து நடிகர் சாந்தனு சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் மாஸ்டர் படத்திற்கு 30 நாட்கள் சூட்டிங் சென்றேன். எனக்கு தனியாக சண்டை காட்சி, பாட்டு எல்லாம் எடுத்தார்கள். விஜய் அண்ணாவுடன் சண்டை போடுவது போன்ற ஒரு காட்சியும் இருந்தது. இந்த படத்தில் எனக்கு 40 நிமிடங்கள் ஸ்கிரீன் டைம் இருக்கும். இதன் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் நான் பாப்புலர் ஆவேன் என்று நினைத்தேன். ஆனால் படம் பார்க்கும் போது தான் தெரிந்தது என்னுடைய காட்சிகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார்கள் என்று. படத்தில் வெறும் 12 நிமிடம் மட்டுமே என்னுடைய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இப்படி தெரிந்திருந்தால் நான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக பேட்டியே கொடுத்திருக்க மாட்டேன் என நடிகர் சாந்தனு வேதனையோடு தெரிவித்துள்ளார்.