தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரிலும், குஷி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை சமந்தா விவாகரத்து குறித்து ஒரு பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பான பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் நான் என்னுடைய திருமணத்தில் 100% உண்மையாகத்தான் இருந்தேன். கடினமான நேரத்தில் தவறான எண்ணங்கள் தோன்றியது.

இருப்பினும் அவை என்னை அழித்து விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய மோசமான நாட்கள் குறைந்துவிட்டது. எனக்கு பலர் ஆறுதலாக இருக்கிறார்கள். என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் உண்மையாக இருந்தும் எதுவும் திட்டமிட்டபடி நடக்கவில்லை. தைரியமாக இருப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. நான் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறேன். நம் வாழ்க்கையில் கடினமான தருணங்கள் வரும் போகும். அதற்காக நாம் அதிலேயே இருந்து விடக்கூடாது என்று சமந்தா கூறியுள்ளார். மேலும் நடிகை சமந்தாவின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் அவர் தைரியத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். ‌