சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய சுப்பிரமணியன் (60) என்பவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசு அதிகாரி ஒருவர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளார். அதாவது சேலம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது தந்தை தூய்மை பணியாளராக பணியாற்றி இறந்துவிட்டார். இதனால் கருணையின் அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதற்காக மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்து தேவராஜனையும் சந்தித்து பேசினார். ஆனால் தேவராஜன் அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். அதோடு தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த அந்தப் பெண் தனது செல்போனில் தேவராஜன் பேசியதை ரெக்கார்ட் செய்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேவராஜனிடம் விசாரணை நடத்தினார். அதில் அவர் அந்தப் பெண்ணிடம் தவறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.