பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்து வருகிறார். இவர் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி விருது வழங்கும் விழாவிலும் நடிகர் சதீஷ் கலந்து கொள்ளாததால் அவருக்கும் டிவி சேனலுக்கும் இடையே ஏதோ பிரச்சனை ‌ இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் நடிகர் சதீஷ் தான் எதற்காக பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விளக்குகிறேன் என்ற காரணத்தை கூறவில்லை.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் வந்தால் ரொம்ப கஷ்டம். கடைசியில் ஏமாற்றத்தில் தான் போய் முடியும். நேற்று வரை நான் பெரிய மேதாவி புத்திசாலி உலகத்தையே மாற்றலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் ஒரு முட்டாள் என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டேன். இந்த உலகத்தை மாற்ற முடியாது நான் என்னை மட்டும் மாற்றிக் கொண்டால் போதுமானது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் விஜய் டிவியை மறைமுகமாக நடிகர் சதீஷ் விமர்சித்துள்ளதாக கூறுகிறார்கள்.