தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற மார்ச் மாதம் 4- ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம்  தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து நிறுவனங்களுக்கும், மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால் குறிப்பிட்ட நாளை தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகிற மார்ச் மாதம் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.