தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, திருப்பூர், விருதுநகர், மதுரை,  தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில்  இன்று 8 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

கன்னியாகுமாரி,

திருநெல்வேலி,

தென்காசி,

விருதுநகர்,

தூத்துக்குடி

புதுக்கோட்டை

நீலகிரி

பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை; 

தேனி .