அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் இன்று மாலை தமிழகம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, நேற்று அருணாசலப்பிரதேசத்தின் மண்டாலா மலைப்பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதனால் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் என்பவர் உயிரிழந்தார். அதேபோல் மற்றொரு விமானியான விவிபி ரெட்டி என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.