தமிழகத்தில் 24 ஆம் தேதி வரை மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.குறிப்பாக (21.11.2023) நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்ப்பு இருந்துள்ளது. மழையின் தாக்கத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்புகள் வெளியாகும் என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் வானிலை நிலவரம் மற்றும் பள்ளி, கல்வித்துறை விடுமுறை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.