
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒரு காலத்தில் தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு ஹிந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2 படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தன்னுடைய அம்மா மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram