இந்தியாவில் பண வீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வினால் ஊழியர்களின் மாத ஊதியமும் அதிகரிக்கிறது. மத்திய அரசு சமீபத்தில் அகவிலை படியை 4 சதவீதம் வரை உயர்த்தியதால் ஆண்டுக்கு 42 சதவீதம் அகவிலை படியை அரசு ஊழியர்கள் பெற்று வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு 48 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கிறது.