தமிழக பாஜகவுக்கு ஒரு மாநில தலைவர் போதும், ஆளுநர் ரவி பாஜக மாநில தலைவராக செயல்பட வேண்டாம். தமிழ்நாட்டில் பிரிவினை, மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் செயல்படுபவர்தான் ஆளுநர் ரவி. நிகழ்ச்சிகளில் சனாதானம், ஆரியம், திராவிடம், காலணி ஆதிக்கம் குறித்து ஆளுநர் கூறும் கருத்து ஆபத்தானவை.

ஆளுநர் ரவியின் திட்டம் தான் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வகுப்புவாதப் பிரிவினை அரசியலைப் பேசி, மீண்டும் வர்ணாசிரம காலத்துக்கு இட்டுச் செல்வது தான் அவரது நோக்கம். இதுவரை நுண்ணிய வர்ணாசிரம அரசியலை பேசி வந்த ஆளுநர் தற்போது வெளிப்படையாக அரசியல்வாதியாகி பேசுகிறார்.

திராவிட ஆட்சி குறித்த ஆளுநரின் விமர்சனம் பாஜகவின் தேர்தல் அரசியல் உள்நோக்கத்தை காட்டுகிறது.கமலாலயத்தில் போய் பேச வேண்டியதை ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு பேசுவது கண்டனத்துக்குரியது என டி.ஆர் பாலு விமர்சனம் செய்துள்ளார்.