தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறி இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கும் திரைப்படங்களை லோகி யுனிவர்ஸ் என ரசிகர்கள் அழைக்க துவங்கி விட்டனர்‌. லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது பற்றி ஒரு பேட்டியில் கூறினார். அதில் மாநகரம் பட கதையை தயார் செய்து பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னேன்.

சிலர் கதை நன்றாக இல்லை என்றார்கள். சிலர் உனக்கு எதுக்குப்பா சினிமா? மறுபடியும் பேங்க் வேலைக்கு போயிடு என்பார்கள். ஆனால் என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு என்னை நம்பினார் என தமக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது குறித்து தெரிவித்துள்ளார்.