நடிகர் அஜித்குமார் அசல் திரைப்படத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் குமார் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கலந்து கொண்ட போது நான் ஆரம்பத்தில் நடிப்பது தமிழ் படம் என்பதால் தமிழ் பேச நான் கொஞ்சம் தடுமாறினேன். இவருக்கு தமிழே பேச தெரியவில்லை என்றார்கள். ஆதலால் தமிழில் பேசுவதை தவிர்த்து விட்டு பொது மேடைகளில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினேன்.

என்ன திமிர் பார்த்தீங்களா? ஆங்கிலத்தில் பேசுகின்றார் என விமர்சித்தார்கள். எதுக்கு பேசணும்? பேசாமலே இருந்து விடலாம் என்று இருந்தேன். திமிர பாருங்க! ஒரு வார்த்தை பேசறான பாருங்க! என்று கூறினார்கள். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதன் பிறகு தான் எனது வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ஆதலால் இதன் காரணமாகவே அஜித் பத்திரிக்கை பேட்டிகளில் கலந்து கொள்ள மறுக்கிறார் என்று சொல்லப்படுகிறது.