பிரபல நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இத்திரைப்படத்தை அவரின் நண்பர்களாகிய நந்தா மற்றும் ரமணாவின் ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. படம் நஷ்டம் அடைந்ததால் நட்பில் சிக்கல் வந்ததாகவும் விஷாலுக்கு சம்பள பாக்கி வைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் அவுட் டோர் யூனிட் எனப்படும் வெளியாட்களுக்கு சம்பள பாக்கி வைத்துவிட்டு ரமணா மற்றும் நந்தா இருவரும் அமைதியாக இருப்பது விஷாலுக்கு சங்கடத்தை அளிப்பதாக கூறப்படுகிறது‌. இதனால் விஷால் இனி படம் நடிப்பதை விட்டுவிட்டு படத்தை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தலாம் என்று முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.