தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் எனும் பெருமையை பெற்றவர் நடிகை நயன்தாரா. இந்த நிலையில் கடந்த ஆண்டுதான் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். தனது கணவருக்காக நடிகர் அஜித்தின் 62 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பினை லைக்கா நிறுவனத்திடம் பேசி வாங்கி கொடுத்துள்ளார்.

துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திடம் விக்னேஷ் சிவன் கதை கூறியுள்ளார். ஆனால் இருவருக்கும் கதை பிடிக்கவில்லை என்று கூறி அஜித் விக்னேஷ் சிவன் 62வது திரைப்படத்திலிருந்து தூக்கி விட்டார். எட்டு மாதம் கொடுத்தும் இப்படி சொதப்பியதால் கணவரின் பெயர் கெட்டுவிடும் என்று நயன்தாராவே அஜித் மற்றும் லைக்காவிடம் பேசியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அவரின் பேச்சைக் கேட்காமல் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் 62.வது திரைப்படத்தை கொடுத்துள்ளார் அஜித். இதனால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் நயன்தாரா கணவரை அவமானப்படுத்தி அனுப்பி விட்ட அஜித் படத்தில் இனிமேல் நடிக்க போவதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம். அஜித் படத்தில் இனி கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா கூறியிருப்பதாக இணையத்தில் செய்திகள் கசிந்து வைரலாகி வருகிறது.