செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி ( ஓபிஎஸ் ஆதரவு ), இப்ப என்ன பண்ண போறாரு பழனிசாமி ? அப்படின்னா… எல்லாத்தையும் வாயை மூடு என சொல்லுறாரு. சென்ட்ரலில் இருந்து கூட்டு மிரட்டிட்டாங்க. பயம் வந்துருச்சு. இனிமேல் அம்மாவை திட்டினாலும் பரவாயில்லை, அக்காவை திட்டினாலும் பரவாயில்லை, இனிமேல்  பெரியாரை திட்டினாலும் பரவால்ல, அண்ணாவை திட்டினாலும் பரவாயில்ல. அப்பப்ப கூடிக்குவிங்க…. உறவாடிக்குவிங்க…. கிஸ் அடிச்சுக்குவிங்க…. ஆனால் திடீர் திடீர்னு கோவம் வந்துரும்.

ஒரே விசயத்துக்கு தான் கோவம் வந்தது ஜெயக்குமார். எனக்கு தெரியும். அம்மாவை திட்டுனதுக்கு இல்லை… தந்தை பெரியாரை பேசுனத்துக்கு இல்லை…. அண்ணாமலை பேசுன ஒரு இடத்தில்,  ஒரு மிஸ்டேக் பண்னார். தவழ்ந்து.. காலில் விழுந்து… பதவிக்கு வந்த உன் பொதுச் செயலாளர் மாதிரி நான் இல்லை என்று சொல்லிட்டாரு. அங்க தான் பொத்திகிட்டு வந்துச்சு.

எனது அன்பு சகோதரர் வேலுமணி கோயம்புத்தூரில் கொடுத்த பேட்டியை பார்த்தேன்… அதுல போயிட்டே இருக்கு.. பொது செயலாளர்… பொது செயலாளர்…. பொது செயலாளர்….  இவங்க எல்லாம் எழுதிடாங்க பொது செயலாளர் என்று… எலெக்ஷன் கமிஷன்ல இல்ல…  இவங்களாம் எழுதிட்டாங்க….ஒரு இடத்துல கூட வேலுமணி வாயில இருந்து அம்மா என  வரமாட்டேங்குது… பொது செயலாளர்…. பொது செயலாளர்….  இப்போ என்ன பண்றது ? நீங்களும் வீர முழக்கமிட்டிங்க…

சிங்கள் லைன்ல கோர் பண்ணீங்க.. எங்க பொது செயலாளர் சொல்லுறது தான்… சொல்லுறதுதான்னு…. ஆகவே மக்களை முட்டாள்கள் ஆக்குவதற்காக ஜெயக்குமார் பேசியிருக்கிறார் என்பதை  பழனிசாமி நிரூபித்து விட்டார். இதான் விஷயம்,  வேற ஒன்னும் இல்ல. விளையாட்டு செய்திகளாக முடியும் என சொன்னேன். அதே மாதிரி விளையாட்டு செய்திகளாக முடிஞ்சிருச்சி. இனி ஜெயக்குமார் பேசுவதையோ,  சி.வி சண்முகம் பேசுவதையோ,  பழனிசாமி பேசுவதையோ தயவு செஞ்சி தமிழ் நாடு மக்கள் சீரியஸ்சா எடுத்துக்காதீங்க என தெரிவித்தார்.