கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்கு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் வரை சிங்கப்பூர், ஜெர்மன், பிரான்ஸ், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெர்மன் நாட்டு சுற்றுலா தம்பதியான யோகா, யுவா ஆகிய இருவரும் வால்பாறைக்கு சென்றனர். அவர்கள் நகராட்சி மார்க்கெட் பகுதியில் காய்கறி கடைகள் மற்றும் பல்வேறு கடைகளை பார்த்து ரசித்தனர். இதனையடுத்து வால்பாறையில் இருக்கும் சுற்றுலா தலங்கள் இயற்கை அழகோடு இருப்பதாக தம்பதியினர் தெரிவித்தனர்.