அண்மையில் சாலை விபத்தில் பலத்த காயமடைந்த சைத்தான் பட நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அருந்ததியின் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன் வரவில்லை என அருந்ததியின் தோழியும் மலையாள நடிகையுமான ரம்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார். அருந்ததிக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.