பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் வருகின்ற மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரியாத்தில் ஆடு மேய்த்த கொடுமை குறித்து ஆடு ஜீவிதம் படத்தின் நிஜ ஹீரோவான நஜீப் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது, எனக்கு சாப்பிட உணவு கிடைக்காமல் ஆற்றுப்பாலை கறந்து அப்படியே குடித்து பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாக கிடைக்காது. குளிக்காமலேயே நாட்களைக் கடத்தினேன். ஏறக்குறைய பரதேசி ரேஞ்சுக்கு மாறிவிட்டேன் என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.