சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த நிகழ்ச்சிக்கு மீடியோக்கள் அதிகம் வந்திருப்பதை பார்த்து பயந்துவிட்டேன். காரணம் தேர்தல் நேரம், மூச்சு விட கூட பயம், இந்த தேதியில் யாருக்கு என்ன நோய் வரும் என்று கணிக்க முடியாது. காற்று மற்றும் நீர் என அனைத்தும் மாசுபட்டு விட்டன. குழந்தைகள் மருந்துகளில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.