பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அந்த வழக்கு விசாரணை தொடர்பாக சீமான் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சீமானுக்கு போலீசார் அனுப்பிய சம்மன் குறித்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.