நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கல்வி நிதி மறுப்பு விவகாரம் ஈடுபட்டனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியதாவது, பாஜக ஆளாக மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு முதலில் விருப்பம் தெரிவித்தது. கடைசியில் யூ-டர்ன் அடித்து விட்டது.

கடந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி இந்த திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட இருந்தது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன் வந்தார். ஆனால் சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்து விட்டனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார். அதற்கு திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, அவர்கள் மனதில் இருப்பது வெளியே வந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு தர்மேந்திர பிரதானின் பேச்சை சான்று. நமது எம்பிக்களை அவமதிப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்தான். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு யூ-டர்ன் அடிக்கவில்லை. எந்த நிலையிலும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழ்நாடு கூறவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.