பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மனோஜ் பாண்டியன், இன்று தொண்டர்களின் உரிமையை மீட்பேன் என்று சொல்லி,  உங்கள் உணர்வை புரிந்த ஒரே தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் இன்று உங்கள் உணர்வை புரிந்து இருக்கின்றார். என்னுடைய உணர்வையும் புரிந்து இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில்  நம்முடைய முடிவு,  எந்த முடிவாக இருந்தாலும் ? அண்ணன் ஓபிஎஸ்  அவர்கள்  தொண்டர்களின் முடிவாக,  கண்டிப்பாக எடுப்பார் என்பதை தெரிவித்து…  சுயமரியாதை உள்ள கூட்டம்  இந்த கூட்டம். கொடி,  சின்னம் இல்லை என்றாலும் கொள்கைக்காக நிற்கின்ற கூட்டம் நம்முடைய கூட்டம் என்பதை அனைவரும் நிரூபித்து காட்டி இருக்கின்றீர்கள்.

அண்ணன் ஓபிஎஸ் அவர்களோடு இருப்பவர்கள் சுயமரியாதை பாதுகாக்கப்பட வேண்டும், சாதுரியமாக செயல்பட வேண்டும்.  இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நல்வழி கொடுத்த அனுபவசாலி அண்ணன் ஓபிஎஸ் ஒருவர் தான் என்பதை மனதில் வைத்து,  அவர் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும்….  அதற்கு நாம் தலைவணங்கி,  அதை ஏற்றுக்கொண்டு வெற்றிப் பாதையில் செல்வோம், வெற்றி அடைவோம். அண்ணா திமுகவை மீட்டெடுப்போம் என்று சொல்லி விடை பெறுகின்றேன் என தெரிவித்தார்.