கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் ஐஸ் பிளான்ட் தெருவில் பனிபிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவருக்கு அமலசந்ததி என்ற மனைவியும், 2 மகள்களும் இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமலசாந்தி திடீரென இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்ததால் மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்த பனிபிச்சை நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பனிபிச்சையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.