தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியதாழை பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நாட்டுப்படகில் அந்தோணி ராஜ் உள்பட 4 பேரும் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பினர். இந்நிலையில் பெரியதாழை தூண்டில் பாலம் அருகே வந்த போது பலத்த காற்று வீசியதால் நிலை தடுமாறிய படகு கடலில் கவிழ்ந்தது.

இதனால் மதன் உள்ளிட்ட 3 பேரும் நீச்சல் அடித்து கரைக்கு வந்தனர். ஆனால் அந்தோணி ராஜ் கடலில் தத்தளித்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் அந்தோணி ராஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.