திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில் வசித்து வந்தார். நேற்று மது போதையில் இருந்து ஸ்டாலின் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை தாக்கியுள்ளார்.

இதனை பார்த்தவர்கள் ஸ்டாலினை கண்டித்தனர். பிறகு ஸ்டாலின் கடற்கரை பகுதிக்கு சென்று மீன்வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ஸ்டாலினை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்டாலின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.